வாராந்திர கூட்ட நெரிசல் காரணமாக கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாராந்திர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-சென்னை-கோவை இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமார்கத்தில் சென்னையில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி பகல் 10.20க்கு புறப்படும் வண்டி எண் 06049 கோயம்பத்தூர் சிறப்பு ரயிலானது அன்றைய தினம் இரவு 8.25க்கு கோவை வந்து சேரும். இந்த ரயிலில் 20 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...