வாராந்திர கூட்ட நெரிசல் காரணமாக கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாராந்திர கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவை-சென்னை-கோவை இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் வண்டி எண் 06050 சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில், மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமார்கத்தில் சென்னையில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி பகல் 10.20க்கு புறப்படும் வண்டி எண் 06049 கோயம்பத்தூர் சிறப்பு ரயிலானது அன்றைய தினம் இரவு 8.25க்கு கோவை வந்து சேரும். இந்த ரயிலில் 20 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...