கோவையில் வாக்கு கேட்டு வந்த பாஜக தொண்டர்கள் மீது கல் எறிந்து காயப்படுத்திய வாலிபர் கைது..!

32 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினரிடம் வாக்குவாதம் செய்து கற்களை தூக்கி வீசிய நவ்சாத் என்ற நபர் மீது 294 பி, 324, 506/2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, நேற்று பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 32 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் வசிக்கின்ற நவ்சாத் என்ற நபர் பாஜகவினர் வாக்கு சேகரிக்க கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதம் செய்த அவர், கற்களை தூக்கி வீசியுள்ளார். இதில், பிரச்சாரத்திற்கு சென்ற 2 ஆண்களும், 3 பெண்களும் காயமடைந்தனர்.



அதில், பிரபு என்ற தொண்டர் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த மகளிர் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

பாதிக்கப்பட்டவர்களை, பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.



மேலும், சம்பவம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுண்டம்பாளையம் காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

தொடர்ந்து சம்பவத்தை விசாரித்த போலீசார், நவ்சாத் மீது 294 பி, 324, 506/2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு இஸ்லாமியர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இஸ்லாமிய வாலிபர் பாஜவினரை ஓட்டு கேட்க விடாமல் கல்லால் தாக்கி விரட்டிய சம்பவம் கோவை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...