கோவை அதிமுக வேட்பாளருக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த எம்.எல்.ஏக்கள்..!

நஞ்சுண்டாபுரம் பகுதியில், எம் எல் ஏக்கள் -அம்மன் கே.அர்ஜுனன் மற்றும்  கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: நேற்று, மார்ச் 27, வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், கோவை தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும், அவரவர் வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில், அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கிஇன்று (மார்ச்.28) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக, அப்பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பகுதிக் கழக செயலாளர்கள் சாரமேடு சந்திரசேகர், உலகநாதன் மற்றும் அதிமுக வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...