முதலில் பூத்களில் ஆட்களை போட்டுவிட்டு அண்ணாமலை தேர்தலில் நிற்கட்டும் -  செயல்வீரர்கள் கூட்டத்தில் எஸ் பி வேலுமணி விமர்சனம்.

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ  பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கினார்.



பின்னர் கூட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி, அதிமுக-வில் இருந்த போது, அம்மா கொடுத்த அனைத்து பதவிகளிலும் இருந்து விட்டு, பின்னர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு திமுகாவிற்கு சென்ற ராஜ்குமார் தான் திமுகவின் கோவை பாராளுமன்ற வேட்பாளராக நிற்கிறார். அப்படி என்றால், கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக-வில் கஷ்டப்பட்ட கட்சி நிர்வாகிகள் யாருமே இல்லை என்று தான் அர்த்தம்.



அதேபோல, பி.ஜே.பி கட்சியில் நிற்கும் அண்ணாமலை அனைத்து பூத்களிலும் பூத் ஆட்கள் போட்டுவிட்டு தேர்தலுக்கு நிற்கட்டும். ஏனென்றால், அந்த கட்சியில் பூத் ஆட்கள் போடவே யாரும் இல்லை என்று தான் அர்த்தம். அதனால், கோவை தொகுதியில் சிங்கை ராமசந்திரன் தான் வெற்றி பெறுவார், என்று கூறினார். 

தொடர்ந்து, பேசிய வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், கோவை தொகுதியில் வேட்பாளர் நான் கிடையாது. நீங்கள் அனைவரும் தான் வேட்பாளர்கள். நீங்கள் தான் அனைத்து பகுதிக்கு சென்று வாக்குகளை சேகரித்து என்னை வெற்றிபெற செய்யப் போகிறீர்கள் என்று கூறினார். இந்த கூட்டத்தில், அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.



நிகழ்ச்சியில், அ.ம.மு.க கட்சியின் முன்னாள் கோவை மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...