முதலில் பூத்களில் ஆட்களை போட்டுவிட்டு அண்ணாமலை தேர்தலில் நிற்கட்டும் -  செயல்வீரர்கள் கூட்டத்தில் எஸ் பி வேலுமணி விமர்சனம்.

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ  பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கினார்.



பின்னர் கூட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி, அதிமுக-வில் இருந்த போது, அம்மா கொடுத்த அனைத்து பதவிகளிலும் இருந்து விட்டு, பின்னர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு திமுகாவிற்கு சென்ற ராஜ்குமார் தான் திமுகவின் கோவை பாராளுமன்ற வேட்பாளராக நிற்கிறார். அப்படி என்றால், கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக-வில் கஷ்டப்பட்ட கட்சி நிர்வாகிகள் யாருமே இல்லை என்று தான் அர்த்தம்.



அதேபோல, பி.ஜே.பி கட்சியில் நிற்கும் அண்ணாமலை அனைத்து பூத்களிலும் பூத் ஆட்கள் போட்டுவிட்டு தேர்தலுக்கு நிற்கட்டும். ஏனென்றால், அந்த கட்சியில் பூத் ஆட்கள் போடவே யாரும் இல்லை என்று தான் அர்த்தம். அதனால், கோவை தொகுதியில் சிங்கை ராமசந்திரன் தான் வெற்றி பெறுவார், என்று கூறினார். 

தொடர்ந்து, பேசிய வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், கோவை தொகுதியில் வேட்பாளர் நான் கிடையாது. நீங்கள் அனைவரும் தான் வேட்பாளர்கள். நீங்கள் தான் அனைத்து பகுதிக்கு சென்று வாக்குகளை சேகரித்து என்னை வெற்றிபெற செய்யப் போகிறீர்கள் என்று கூறினார். இந்த கூட்டத்தில், அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.



நிகழ்ச்சியில், அ.ம.மு.க கட்சியின் முன்னாள் கோவை மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...