காங்கேயத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் செயல்படுகிறது - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீது பாஜக நிர்வாகி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார்..!

மாநிலம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள போதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து டாஸ்மாக் பார்கள் இயங்கி வருவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக பாஜக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதிகளில் அதிகாலை முதலே 24 மணிநேரமும் தங்கு தடையின்றி மது விற்பனை, அனைத்து டாஸ்மாக் பார்களிலும் நடைபெற்று வருவதாக, பாஜக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதித்த நேரத்தை பொருட்படுத்தாமல், 24 மணிநேரமும் விற்பனை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய பாஜக மாவட்ட துணைத்தலைவர், கோபாலகிருஷ்ணன், காங்கேயம் பழையக்கோட்டை சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சென்று லைவ் வீடியோ எடுத்து பதிவேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



காங்கயத்தில் டாஸ்மாக் கடைகளில் நடைபெற்று வரும்  அத்துமீறல்கள் குறித்து ஆன்லைனில் இந்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தேர்தல் ஆணையத்தின் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

புகாரில், காங்கேயம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படாத நேரத்திலும் டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் 24 மணிநேரமும் கிடைப்பதாக தெரிவித்த அவர், தற்போது தேர்தல் தேதி அறிவித்த பின்னர், தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள போதும், தடை செய்யப்பட்ட நேரத்தில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு மிகவும் எளிதாக கிடைக்கின்றது என்று குற்றம் சாட்டினார். 



கால்நடை விற்பனையில் ஈடுபடும் விவசாயிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பிடிக்கும் தேர்தல் பறக்கும் படையினர், தடைசெய்யப்பட்ட நேரத்தில் மதுவிற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்கமுடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் தெளிவாக சிந்தனையுடன் வாக்குச் செலுத்த கூடாது என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, உடனடியாக தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...