காங்கேயத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் செயல்படுகிறது - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீது பாஜக நிர்வாகி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார்..!

மாநிலம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள போதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து டாஸ்மாக் பார்கள் இயங்கி வருவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக பாஜக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதிகளில் அதிகாலை முதலே 24 மணிநேரமும் தங்கு தடையின்றி மது விற்பனை, அனைத்து டாஸ்மாக் பார்களிலும் நடைபெற்று வருவதாக, பாஜக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதித்த நேரத்தை பொருட்படுத்தாமல், 24 மணிநேரமும் விற்பனை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய பாஜக மாவட்ட துணைத்தலைவர், கோபாலகிருஷ்ணன், காங்கேயம் பழையக்கோட்டை சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சென்று லைவ் வீடியோ எடுத்து பதிவேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



காங்கயத்தில் டாஸ்மாக் கடைகளில் நடைபெற்று வரும்  அத்துமீறல்கள் குறித்து ஆன்லைனில் இந்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தேர்தல் ஆணையத்தின் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

புகாரில், காங்கேயம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படாத நேரத்திலும் டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் 24 மணிநேரமும் கிடைப்பதாக தெரிவித்த அவர், தற்போது தேர்தல் தேதி அறிவித்த பின்னர், தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள போதும், தடை செய்யப்பட்ட நேரத்தில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு மிகவும் எளிதாக கிடைக்கின்றது என்று குற்றம் சாட்டினார். 



கால்நடை விற்பனையில் ஈடுபடும் விவசாயிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பிடிக்கும் தேர்தல் பறக்கும் படையினர், தடைசெய்யப்பட்ட நேரத்தில் மதுவிற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்கமுடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் தெளிவாக சிந்தனையுடன் வாக்குச் செலுத்த கூடாது என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, உடனடியாக தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...