திருப்பூரில் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் உள் பனியன் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல்..!

மேலும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்த அவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள் பனியன் அணிந்தபடியும் திருப்பூரின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நூல் மற்றும் ஜமக்காளம் ஆகியவற்றை தட்டில் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த காலங்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய அரசுக்கும் புரிந்துணர்வு இல்லாததின் காரணமாக திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதே நேரத்தில் திருப்பூரில் பிரதான கோரிக்கையான நூல் விலையை கட்டுப்படுத்த, நூல் உற்பத்தியை முறைப்படுத்தி நலிவடைந்த தொழில்களை மீட்டெடுக்க மூன்றாம் முறையாக மத்தியில் பொறுப்பேற்கும் மோடி தலைமையிலான அரசிடம் குரல் கொடுத்துப் பெற்றுத் தருவோம் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு பாஜகவை ஒடுக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கூட பாஜகவுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...