திருப்பூரில் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் உள் பனியன் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல்..!

மேலும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்த அவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள் பனியன் அணிந்தபடியும் திருப்பூரின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நூல் மற்றும் ஜமக்காளம் ஆகியவற்றை தட்டில் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த காலங்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய அரசுக்கும் புரிந்துணர்வு இல்லாததின் காரணமாக திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதே நேரத்தில் திருப்பூரில் பிரதான கோரிக்கையான நூல் விலையை கட்டுப்படுத்த, நூல் உற்பத்தியை முறைப்படுத்தி நலிவடைந்த தொழில்களை மீட்டெடுக்க மூன்றாம் முறையாக மத்தியில் பொறுப்பேற்கும் மோடி தலைமையிலான அரசிடம் குரல் கொடுத்துப் பெற்றுத் தருவோம் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு பாஜகவை ஒடுக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கூட பாஜகவுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...