தாராபுரத்தில் கொடுத்தல் வாங்கல் தகராறு; இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவர் கைது..!

இந்து மக்கள் கட்சியின் பெண் மாநில நிர்வாகியை தாக்கிய வழக்கில், அதே கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு.


திருப்பூர்: தாராபுரத்தில் கொடுத்தல் வாங்கல் தகராறில் இந்து மக்கள் கட்சியின் பெண் மாநில நிர்வாகியை தாக்கிய வழக்கில் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணி( 34) இந்து மக்கள் கட்சியில் மாநில பெண் நிர்வாகியாக உள்ளார். இவர் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தாராபுரம் அடுத்த காந்திஜி நகரைச் சேர்ந்த சங்கர் (51) இவர் இதே கட்சியில் அமைப்புக் குழு தலைவராகவும், இவரது நண்பர் சுரபிமணி (53) இவரும் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் சங்கர், மதிவாணியிடம் வட்டிக்கு கடனாகப் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பணம் கேட்டு சங்கரிடம் போனில் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சங்கர் தனது மனைவியிடம் கூறியபோது கோபமடைந்த சங்கர், மனைவி இருவரும் சேர்ந்து மதிவாணி பியூட்டி பார்லருக்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் சுரபிமணியும் அவர்களை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. சண்டையில் மதிவாணி காயமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, போலீசார் வாக்கு மூலம் பெற்று மதிவாணியை தாக்கியதாக சங்கர் மற்றும் சுரபிமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...