கோவையின் வளர்ச்சியை கொண்ட திட்டங்களை செயல்படுத்த எந்த கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேச்சு.


கோவை: கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று, கோயம்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்கள் மத்தியில் பா.ஜ.க மாநிலத் தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை உரையாற்றினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள், 200க்கும் அதிகமான கல்வி நிலையங்கள், இயற்கை வளங்கள் என வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை வளங்களும் இருந்தும், கோயம்புத்தூர் தனது முழுமையான வளர்ச்சியைப் பெற முடியாததின் காரணங்கள் குறித்துப் பேசினார்.



மேலும், கோயம்புத்தூரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த இத்தனை ஆண்டுகள் எந்தக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்கினார்.

அதேபோல, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதையும், அதற்குத் தேவையான தொலை நோக்குப் பார்வை உடையவர்களை, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...