கோவையில் கிறிஸ்துவர்களுக்கு புனித வாரத்தை தொடங்கி வைத்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூறும் புனித வாரம் தொடங்கியது.



Coimbatore: இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூறும் புனித வாரத்தின் தொடக்கமாக, மார்ச் 24 ஆம் தேதி கோவையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது. பிப்ரவரி 14 தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக துவங்கிய இந்த ஊர்வலத்தில் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ரவி இன்பசிங், உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர், சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குருத்தோலைகளை ஏந்திக்கொண்டு "ஓசன்னா ஓசன்னா" என்று பாடியபடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சேர்ந்து ஊர்வலமாக சென்றனர். ஐந்தாவது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்த இந்த ஊர்வலம், புனித வாரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஊர்வலம் முடிந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் மார்ச் 31 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுவதால், இந்த நாட்களில் இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாட கிறிஸ்தவ சமூகம் தயாராகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...