உடுமலையில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 44 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் திருட்டு - பொதுமக்கள் அச்சம்..!

இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி.புரம்,பி.வி.லே-அவுட்டைச் சேர்ந்தவர் சாந்தாமணி(52). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனிடையே, இன்று மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ 1 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதே போன்று, எஸ்.வி.புரம், ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யாதேவி(29). இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர், இன்று மதியம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.



அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதே போல, எஸ்.வி.புரம், கணேசாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாச்சம்மாள்(75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு அவரது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ 36 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.



இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.வி.புரம் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...