கவுண்டம்பாளையம் திமுக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதி திமுக கழக அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த கருத்துக்களை திமுக நிர்வாகிகளுடன் பரிமாறிக் கொண்டனர். உடன் திமுக கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

இதேபோல், கோவை பாராளுமன்றத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி DMK ITWing கலந்தாலோசனை கூட்டம் நேற்று (மார்ச்.18) கவுண்டம்பாளையம் பகுதி கழகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் களத்தில் தொகுதியில் செய்ய வேண்டிய சமூக ஊடக பிரச்சாரம் குறித்து மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி முன்னிலையில் திட்டமிடப்பட்டது.



உடன் தமிழ்மறை, மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ், பகுதி கழக செயலாளர் சகோதரர் சரத் விக்னேஷ், பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், மாவட்ட சிறுபாண்மை அணி அமைப்பாளர் ஆரோக்கிய ஜான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஹரிஷ் மற்றும் மாவட்ட துணை, தொகுதி, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...