தாராபுரம் அருகே ஆச்சியூரில் ஆடு திருடிய தொழிலாளி கைது – போலீசார் நடவடிக்கை

மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் பட்டியை திறந்தபோது, ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில், பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே ஆச்சியூரை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் ஆடுகளை பட்டியில் இருந்து மேய்ச்சலுக்காக அனுப்பி வைத்தார். பின்னர் மாலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு நேற்று காலையில் பட்டியை திறந்தார். அப்போது ஒரு ஆடு குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடியதாக பழனி தாலுகா பெரிச்சிபாளையம் கல்லுத்துறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...