நல்லாம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு(38), துடியலூரை சேர்ந்த பெயிண்டர் டேவிட் சாம்(40), நல்லாம்பாளையம் அன்னையப்பன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி(35) ஆகிய 3 பேரை கைது செய்து.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று (மார்ச்.14) ரோந்து பணி சென்று கொண்டிருந்தனர். அப்போது நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி ரோட்டில் உள்ள காலி இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு(38), துடியலூரை சேர்ந்த பெயிண்டர் டேவிட் சாம்(40), நல்லாம்பாளையம் அன்னையப்பன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி(35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...