பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றம்

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் அப்பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (12.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.89க்குட்பட்ட பி.என்.டி.காலனி சமீம் கார்டன் மற்றும் ஜூடிசில் காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ..20.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தினை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.



தொடர்ந்து, வார்டு எண்.89க்குட்பட்ட கோவைப்புதூர் ஹவுசிங்யூனிட் சாலையிலிருந்து சுண்டக்காமுத்தூர் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச்சாலை அமைப்பது குறித்தும் மற்றும் வார்டு எண்.100க்குட்பட்ட பொள்ளாச்சி சாலை முதல் செட்டிபாளையம் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச் சாலை அமைப்பது குறித்தும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து,தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டில் சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் எஸ்.எஸ்.கார்டன் முதல் செந்தமிழ் நகர் வரை பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன் வரை தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் மஞ்சிப்பள்ளம் வரை மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் துவக்கி வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பாபு, செந்தில்குமார், முருகேசன், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, சக்திவேல், நாசர், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...