பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றம்

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் அப்பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (12.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.89க்குட்பட்ட பி.என்.டி.காலனி சமீம் கார்டன் மற்றும் ஜூடிசில் காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ..20.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தினை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.



தொடர்ந்து, வார்டு எண்.89க்குட்பட்ட கோவைப்புதூர் ஹவுசிங்யூனிட் சாலையிலிருந்து சுண்டக்காமுத்தூர் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச்சாலை அமைப்பது குறித்தும் மற்றும் வார்டு எண்.100க்குட்பட்ட பொள்ளாச்சி சாலை முதல் செட்டிபாளையம் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச் சாலை அமைப்பது குறித்தும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து,தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டில் சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் எஸ்.எஸ்.கார்டன் முதல் செந்தமிழ் நகர் வரை பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன் வரை தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் மஞ்சிப்பள்ளம் வரை மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் துவக்கி வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பாபு, செந்தில்குமார், முருகேசன், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, சக்திவேல், நாசர், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...