உடுமலை அருகே பாலப்பம்பட்டியில் பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருட்டு -காவல்துறை விசாரணை

குளிர்பானம் கேட்பது போல் நடித்து பெட்ரோல் பங்கில் கல்லாப் பெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற இரண்டு பேரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டி அருகே உடுமலை-பழனி நெடுஞ்சாலையை ஒட்டியவாறு தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.இங்கு பெட்ரோலுடன் குளிர்பானம் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடிப்பதற்காக இரண்டு ஆசாமிகள் வந்து உள்ளனர். பெட்ரோல் அடித்த பின்பு பணத்தை கொடுத்து விட்டு தாகமாக உள்ளதாகவும், அதனால் குளிர்பானம் கேட்டு உள்ளனர்.

அதைத்தொடர்ந்து பணியாளர் குளிர்பானத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு பணத்தைப் பெற்று கல்லாப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ 10 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் செல்போன் மூலம் உரிமையாளருக்கு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து உரிமையாளர் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர்கள் எந்த வழியாக தப்பிச் சென்றனர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாலப்பம்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...