திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார மையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு எதிராக பாஜக மற்றும் அதிமுகவினர் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



ஆரம்ப சுகாதார மையம் அமையும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாசல் பகுதி இல்லாமல் போகும் என பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், ஆனால் வாசல் பகுதிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் புறம்போக்கு இடத்தில் ஆரம்ப மையம் கட்டுவதாகவும், அரசியல் சூழ்ச்சி காரணமாகவும் திமுக விற்கு பெயர் வந்துவிடும் என்பதால் பாஜக, அதிமுகவினர் திட்டமிட்டு பொய்யான செய்திகளை மக்களிடம் பரப்பி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டி இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப மையம் குறித்த வரைபடத்தை பதாகையாக வைத்து ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஈடுபட்டனர்.



இடுவம்பாளையம் பகுதியில் அவசர உதவிக்கு 5 கிலோமீட்டர் அப்பால் செல்ல வேண்டிய நிலையில் ஆரம்ப மையம் அமையும் பட்சத்தில் தங்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் ஆரம்ப மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...