போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி வால்பாறையில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கேடாக அமைந்துள்ளதாகவும், தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச் செயலாளர் மயில் கணேசன் மற்றும் வால்பாறை அமீது முன்னிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கேடாக அமைந்துள்ளதாகவும், தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டு உள்ளதாகவும், திமுக அரசை கண்டித்து போதைப்பொருள் பழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி வால்பாறை அதிமுக கட்சியினர் 300 க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 11 மணியில் அளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஆண்கள், பெண்கள் கையில் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து மனித சங்கிலி போராட்டம் காந்தி சிலை வரை நடைபெற்றது. போதைப் பொருட்கள் மயக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விஜயகுமார், பொன் கணேசன், சாளவுதீன், மோகன், RR பெருமாள், ஆடிட்டர் சண்முகவேல், itwing சண்முகம், sks பாலு, சசி, ரமேஷ், பாபு, விமலா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...