குண்டடத்தில் ரூ.14.84 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் - அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

குண்டடத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சங்கரண்டாம்பாளையத்தில் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ. 1.06 கோடி மதிப்பீட்டில் கால்நடை கிளை மருந்தகம் புதிய கட்டடங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.



திருப்பூர்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.14.84 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.13.78 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்து, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் குண்டடம் மற்றும் சங்கரண்டாம்பாளையம் ஆகிய இடங்களில் கால்நடை கிளை மருந்தகங்களை திறந்து வைத்தனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது, முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் நமது மாவட்டங்களில் இருக்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் எல்லாம் விரைவாக மக்களுக்கு மக்களுடைய பயன்பாட்டு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார்.

அந்த வகையில் இன்னைக்கு அனைத்து மாவட்டங்களிலும் இன்றைக்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் உங்களுடைய ஆதரவோடு 2021 ஆம் ஆண்டு மே திங்கள் 7-ம் நாள் முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். அந்த காலகட்டம் என்பது ஒரு கொரோனா காலகட்டம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலையில் நாம் தவித்துக் கொண்டிருந்தோம்.

எனவே அந்த கட்டத்திலே முதலமைச்சராக பொறுப்பேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 என்கிற மகத்தான திட்டத்தை வழங்கியது வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண்மைக்கான கருவிகள் வழங்குற நிகழ்வு, நிலத்தடி நீரை மேம்படுத்துகிற திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். 20 ஆண்டுகாலம் காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்கடையில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் பல்லடம் தாராபுரம் சாலை முதல் குங்குமம்பாளையம் வரையிலும், ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் கள்ளிப்பாளையம் குங்குமம்பாளையம் வரையிலும், ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் கண்ணாங்கோவில் ஊராட்சியில் உ.ஆலம்பாளையம் முதல் குள்ளாயிபாளையம் வரையிலும் 61601 மொத்தம் ரூ.13.78 கோடி தார் சாலைகள் அமைக்கும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



அதனைத் தொடர்ந்து, குண்டடம் ஊராட்சி ஒன்றியம், குண்டடத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சங்கரண்டாம்பாளையத்தில் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ. 1.06 கோடி மதிப்பீட்டில் கால்நடை கிளை மருந்தகம் புதிய கட்டடங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பூகழேந்தி, உதவிக்கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) இளம்பூரணம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...