கோவை பெரியநாயக்கன்பாளையம் புதிய மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: தேசத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிற வகையிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.11) துவக்கி வைத்தார்.

அதன்படி கோவையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 1.76 கி.மீ நீளத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை இன்று (மார்ச்.11) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் J. ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தல் படி மாவட்ட பொது செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி. கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட செயலாளர் சௌந்தர்ராஜன், பெரியநாயக்கன்பாளையம் மண்டல் தலைவர்கள் மகேந்திரன், ஜெயபிரகாஷ் புவனேஸ்வரன் ஆகியோருடன் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்கள்.

மேலும் இதேபோல 905 கோடி ரூபாய் மதிப்பில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலைப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், இவற்றை உள்ளடக்கி 3200 கோடி ரூபாய் மதிப்பிலானபணி நிறைவடைந்தவற்றை திறந்து வைத்ததோடு, அடிக்கலும் நாட்டினார்.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில், 112 நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார்.

Newsletter

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...