கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் உறுதிமொழி எடுக்கும் விழா

கே.என்.சி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு உறுதிமொழி எடுக்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை வழங்கினர்.


கோவை: கற்பகம் செவிலியர் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு "உறுதிமொழி எடுக்கும் விழா" மார்ச் 9, 2024 அன்று கே.என்.சி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்தனர்.



இந்நிகழ்ச்சியை சிறபிக்க வந்தவர்கள் தலைமை விருந்தினர் டாக்டர். சுபா சூரியா பஞ்சலிங்கம், எம்.எஸ்.சி (நர்சிங்), பி.எச்.டி, எம்.பி.ஏ, செவிலியர் சேவைத் தலைவர், கஸ்தூரிபா மருத்துவமனை, மணிப்பால் மாநிலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர் கர்னல் டாக்டர். வி.வெங்கடேசன், வி.எஸ்.எம், மருத்துவ இயக்குநர், கற்பகம் மருத்துவமனை; திரு. சிவகுமார், பொது மேலாளர், கற்பகம் மருத்துவமனை. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.



கற்பகம் செவிலியர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுதா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு குத்துவிளக்கேற்றி, பின்னர் சிவகாமி, உதவிப் பேராசிரியர் மாணவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



இந்த நாளின் முக்கியத்துவம் பேராசிரியர் இலக்கியாவால் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார். இணைப் பேராசிரியர் சாந்தா, இணைப் பேராசிரியர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...