கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சிப் பகுதியில் பிரதமரின் ஆத்மநிர்பா் நிதி திட்டத்தின்கீழ் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ்கள், மாநகராட்சி பிரதான அலுவலக தனி முகாமில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும்.

வடக்கு மண்டலத்தில் மார்ச் 7-ஆம் தேதி முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும்.

எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள், தங்களின் ஆதார் அட்டை நகலைக் காண்பித்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...