கோவை மேட்டுப்பாளையம் கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசுத்தோட்டக்கலை பழப்பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் கடந்த 1900 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமையான இந்த பழப்பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சராசரியாக ஆண்டு தோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 செமீ முதல் 140 செமீ வரை மழை பெய்து வருகிறது. இந்த பழப்பண்ணையில் சிறுவர்களுக்கான விளையாட்டுத்திடல், செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் வயது வித்தியாசமின்றி விளையாடியும், குளித்தும் மகிழ்ந்து வந்தனர். இதனால் குறைந்த பொருட்செலவில் ரம்மியமான, இதமான சூழலை ரசிக்க கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் (மார்ச்.6) அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று ஆர்வத்துடன் கல்லாறு பழப்பண்ணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...