கோவை மேட்டுப்பாளையம் கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசுத்தோட்டக்கலை பழப்பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் கடந்த 1900 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமையான இந்த பழப்பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சராசரியாக ஆண்டு தோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 செமீ முதல் 140 செமீ வரை மழை பெய்து வருகிறது. இந்த பழப்பண்ணையில் சிறுவர்களுக்கான விளையாட்டுத்திடல், செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் வயது வித்தியாசமின்றி விளையாடியும், குளித்தும் மகிழ்ந்து வந்தனர். இதனால் குறைந்த பொருட்செலவில் ரம்மியமான, இதமான சூழலை ரசிக்க கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் (மார்ச்.6) அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று ஆர்வத்துடன் கல்லாறு பழப்பண்ணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...