ஈஷாவில் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழா - பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்தின் அசத்தல் நடன நிகழ்ச்சி

தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்க்ஷா கலைத்திருவிழாவின், நிறைவு நாளில் பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த் குழுவினர் நிகழ்த்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி, பார்ப்போரை மெய் சிலிர்க்க செய்தது.

இத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று(மார்ச் 7) தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



அதனை தொடர்ந்து பத்மஸ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அவரும், அவருடைய குழுவினரும் நந்தி மற்றும் சிம்ஹ கதைகளை தங்கள் எழிலான நடனத்தின் மூலம் மீட்டுருவாக்கினர். இந்த குழுவில் 20 பெண் நடனக் கலைஞர்களும், 3 ஆண் நடனக்கலைஞர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த அற்புத நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மூழ்கி திளைத்தனர். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் வெளிநாட்டவர்களும் கண்டு ரசித்தனர்.

இவர் இந்தியாவின் தலைச் சிறந்த நடன கலைஞர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி இரு நடன கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும், சங்கரானந்த கலாஷேத்ரா எனும் புகழ்பெற்ற அமைப்பை கலை இயக்குனராக வழிநடத்தி வருகிறார்.



கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டாக மஹாசிவராத்திரி விழா இன்று மார்ச் 8 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாரதத்தின் பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும், யக்க்ஷா கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...