ஈஷாவில் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழா - பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்தின் அசத்தல் நடன நிகழ்ச்சி

தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்க்ஷா கலைத்திருவிழாவின், நிறைவு நாளில் பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த் குழுவினர் நிகழ்த்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி, பார்ப்போரை மெய் சிலிர்க்க செய்தது.

இத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று(மார்ச் 7) தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



அதனை தொடர்ந்து பத்மஸ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அவரும், அவருடைய குழுவினரும் நந்தி மற்றும் சிம்ஹ கதைகளை தங்கள் எழிலான நடனத்தின் மூலம் மீட்டுருவாக்கினர். இந்த குழுவில் 20 பெண் நடனக் கலைஞர்களும், 3 ஆண் நடனக்கலைஞர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த அற்புத நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மூழ்கி திளைத்தனர். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் வெளிநாட்டவர்களும் கண்டு ரசித்தனர்.

இவர் இந்தியாவின் தலைச் சிறந்த நடன கலைஞர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி இரு நடன கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும், சங்கரானந்த கலாஷேத்ரா எனும் புகழ்பெற்ற அமைப்பை கலை இயக்குனராக வழிநடத்தி வருகிறார்.



கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டாக மஹாசிவராத்திரி விழா இன்று மார்ச் 8 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாரதத்தின் பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும், யக்க்ஷா கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...