உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து - புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது? மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும் முற்றிலும் குப்பைகள் மற்றும் முட்செடிகள் அதிகளவு இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதுகுறித்து உடுமலை தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடுமலை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில் இப்பகுதியில் குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...