உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து - புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது? மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும் முற்றிலும் குப்பைகள் மற்றும் முட்செடிகள் அதிகளவு இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதுகுறித்து உடுமலை தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடுமலை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில் இப்பகுதியில் குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...