உடுமலை பகுதி எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு சிறப்பு விருது அறிவிப்பு

நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இவருக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: தமிழ்மொழியின் மேம்பாட்டினை முன்னிறுத்தி செயல்படும் எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூய தமிழ் பற்றார்களுக்கான விருதுகள் மாநிலத்தில் 21 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மஸ்தான் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த முத்து சுப்ரமணியன்(75) என்பரும் அடங்குவார்.

இவருக்கு நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. வணிகவரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற எழுத்தாளர் முத்து சுப்பிரமணியன் ஏற்கனவே 2019-ல் திருப்பூர் மாவட்டத்திற்கான தமிழ் செம்மல் விருதை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற முத்து.சுப்ரமணியனுக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...