உடுமலை பகுதி எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு சிறப்பு விருது அறிவிப்பு

நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இவருக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: தமிழ்மொழியின் மேம்பாட்டினை முன்னிறுத்தி செயல்படும் எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூய தமிழ் பற்றார்களுக்கான விருதுகள் மாநிலத்தில் 21 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மஸ்தான் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த முத்து சுப்ரமணியன்(75) என்பரும் அடங்குவார்.

இவருக்கு நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. வணிகவரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற எழுத்தாளர் முத்து சுப்பிரமணியன் ஏற்கனவே 2019-ல் திருப்பூர் மாவட்டத்திற்கான தமிழ் செம்மல் விருதை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற முத்து.சுப்ரமணியனுக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...