உடுமலை பகுதி எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு சிறப்பு விருது அறிவிப்பு

நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இவருக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: தமிழ்மொழியின் மேம்பாட்டினை முன்னிறுத்தி செயல்படும் எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூய தமிழ் பற்றார்களுக்கான விருதுகள் மாநிலத்தில் 21 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மஸ்தான் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த முத்து சுப்ரமணியன்(75) என்பரும் அடங்குவார்.

இவருக்கு நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. வணிகவரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற எழுத்தாளர் முத்து சுப்பிரமணியன் ஏற்கனவே 2019-ல் திருப்பூர் மாவட்டத்திற்கான தமிழ் செம்மல் விருதை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற முத்து.சுப்ரமணியனுக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...