ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 15.78 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஏலத்தில் கடந்த வாரத்தை விட 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம் 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. நேற்று (மார்ச்.5) கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.

முதல் தர கொப்பரை 222 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 80 ரூபாய் முதல், 82.55 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 264 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 40 முதல், 71 ரூபாய் வரை விலை கிடைத்தது.

மொத்தம், 486 கொப்பரை மூட்டைகளை, 72 விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட, 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம், 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...