ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திருப்பூரில் சவரத் தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், தவில், நாதஸ்வர கலைஞர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் தமிழ்நாடு ஹேர் ட்ரெஸ்ஸஸ் யூனியன் சார்பில் சவரத் தொழிலாளர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் ஜீவமதி தலைமையில் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும், இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், தவில், நாதஸ்வர கலைஞர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரான கண்டன முழச்சங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் புறநகர் மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...