ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திருப்பூரில் சவரத் தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், தவில், நாதஸ்வர கலைஞர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் தமிழ்நாடு ஹேர் ட்ரெஸ்ஸஸ் யூனியன் சார்பில் சவரத் தொழிலாளர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் ஜீவமதி தலைமையில் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும், இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், தவில், நாதஸ்வர கலைஞர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரான கண்டன முழச்சங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் புறநகர் மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...