இந்தாங்க மோடி சுட்ட வடை எடுத்துக்கோங்க என கோவையில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம், கருப்பு பணம் ஒழிப்பு, மீனவர் பாதுகாப்பு, இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என வாக்குறுதிகளை அள்ளி வீசிய மோடி, அதனை காற்றில் பறக்க விட்டுவிட்டார் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள், பல்வேறு வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து, வாக்காள பெருமக்களை வாக்குக்காக வெகுவாக ஈர்க்கின்றனர்.

இந்த நிலையிலே, கோவை சாய்பாபா காலனி பகுதியில் திமுக தலைமை இட்ட உத்தரவின் அடிப்படையில், நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து பிரதமர் மோடி ஏமாற்றுகின்றார் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பிரச்சாரம் சாய்பாபா காலனி பகுதியில் வீடுகள், கடைகளில் நடத்தினார்கள்.



நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம், கருப்பு பணம் ஒழிப்பு, மீனவர் பாதுகாப்பு, இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என வாக்குறுதிகளை அள்ளி வீசிய மோடி, அதனை காற்றில் பறக்க விட்டார்.

வாயில் வடை சுடுவதாக, வாக்குறுதிகளை சொல்லிவிட்டு, அதனை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றுவதாக பிரச்சாரத்தில் ஈடுப்ட்டனர் . பாசிச ஆட்சி பாஜக ஆட்சி மோடி தலைமையில் நடப்பதாக தெரிவித்து அவர்கள் நூதன முறையில் வீடு வீடாக திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . மோடி சுட்ட வடை இந்தாங்க என தெரிவித்து, ஊட்டி விட்டு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...