தாராபுரத்தில் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேனர் கிழிப்பு

அண்ணா சிலை பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். பேனரில் முதலமைச்சரின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படத்தையும் மர்ம நபர்கள் கிழித்து விட்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க‌.ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது சம்பவம் திமுக கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71, ஆவது பிறந்தநாள் விழா நேற்று திமுக நகரச் செயலாளர் முருகானந்தன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலையில் அண்ணா சிலை பகுதியில் நேற்று மாலை 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.



இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கே.எஸ்.தனசேகர் ஆதரவாளர்கள் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படம் அடங்கிய பேனரையும் கிழித்து விட்டு சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நிர்வாகிகளின் உட்கட்சி பூசல் அக்கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் திமுக நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் கலையரசனிடம் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50,க்கு மேற்பட்ட திமுகவினர் மனு கொடுத்தனர். இதனால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் முன்னாள் நகர செயலாளரும், தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.எஸ்.தனசேகர் ஒரு அணியினராகவும், தற்போதைய தாராபுரம் நகர செயலாளராக இருந்து வரும் முருகானந்தம் மற்றொரு அணியாகவும். இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு கடந்த 7 மாத காலமாக கருத்து வேறுபாடுடன் கட்சிப் பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...