பிரதமர் மோடி வாயில் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக நூதன பிரச்சாரம்

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம்ரூபாய் போடுவேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவேன் என கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிரதமர் மோடி பின்னர் எதையும் செயல்படுத்தாமல் வாயில் வெறும் வடை சுடுவதாக கூறி பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடை மாஸ்டர் மோடி என கடையை வைத்து பிரதமர் மோடி வடிவிலான முகமூடி அணிந்து பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உளுந்து வடையை குவித்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி பிரதமர் மோடி சொன்ன திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...