மூன்று ஆண்டுகளாக வீட்டு வரியை வாங்காமல் வீரணம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக வடிவேல் என்பவர் புகார்

வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள். தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை. தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளனர் என்று வடிவேலு என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு தோட்டம் பகுதியில் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருபவர் வடிவேல்.

இவர் இறுதியாக 2020 - 2021 ஆம் ஆண்டில் வீரணம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் தனது வீட்டிற்கு வரி செலுத்தி உள்ளார். அதற்குப் பிறகு 2022,2023 தற்போது 2024 ஆகிய வருடங்களுக்கு வீட்டிற்கு வரி செலுத்த சென்றால் ஊராட்சி மன்ற செயலாளர் மனு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்.



தற்போது ஆன்லைன் சர்வர் வேலை செய்யவில்லை.

தலைவரிடம் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என பல்வேறு காரணங்களை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக வடிவேலுவை அலைக்கழித்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வடிவில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் மனுவை கொடுத்துவிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் போன்ற அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

மேலும் தான் 2020-2021 ஆம் ஆண்டு வைத்திருக்கும் ரசீதில் உள்ள வரி விதிப்பு என்னை ஆன்லைனில் ஆய்வு செய்தால் அது பதிவாகவில்லை என வருகின்றது. இதனால் இங்கு வரி ஏய்ப்பு ஏதாவது நடந்திருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை முறையாக செலுத்தலாம் என மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத்தை நாடினால் என்னை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பி விடுகின்றனர் எனவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...