வாலாங்குளம் பகுதியில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

தமிழகத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளுர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சுற்றுலாத்துறை சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வாலாங்குளம் பகுதியில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், இன்று (02.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போதுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,



தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் அனைத்துத்துறைகளிலும் பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் படி, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தமிழக சுற்றுலாத்துறையானது இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உள்ளுர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சுற்றுலாத்துறை சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலாங்குளம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையில் படகு இல்லம் மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பின்பு மாற்று இடத்தில் படகு இல்லமானது உரிய வாகனநிறுத்துமிடம் மற்றும் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார், செயற்பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சுற்றுலா அலுவலர் (LT) துர்காதேவி, குணசேகரன், மேலாளர் ராஜகுரு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...