சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டராக ஏஐசி ரைஸ் தேர்வு - நிதி மற்றும் பரிசினை வழங்கினார் அமைச்சர் டி.எம்.அன்பரசு

சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கிய நிதி மற்றும் பரிசினை, ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



சென்னை: ஸ்டார்அப் தமிழ்நாடு அமைப்பானது மாநிலம் முழுவதும் சிறந்த இன்குபேட்டர்களை அங்கீகரிக்க நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்குபேட்டர்களுக்கு நிதியினை வழங்கி கௌரவித்தது. இதில் சிறந்த ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் வரிசையில் ஏஐசி ரைஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கான நிதி மற்றும் பரிசினை தமிழ்நாட்டின் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் டி.எம். அன்பரசு வழங்கினார். இதில் ஏஐசி ரைஸின் சார்பாக ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் மற்றும் இன்குபேஷன் பிரிவின் மேலாளர் பிரதீப் ராஜ் ஆகியோர் நிதியினைப் பெற்றனர். இந்நிதியானது ஏஐசி ரைஸின் உள்கட்டமைப்பு மற்றும் ஏஐசி ரைஸின் ஸ்டார்ட்அப்களின் மேலாண்மைக்காக பயன்படுத்தப்படும் என ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலக்கிருஷ்ணன் கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இயக்கனர் சிவராஜ் இராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...