உடுமலை அருகே கிராமப்புறங்களில் நாய் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்- அரசு மருத்துவமனையில் அனுமதி

பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய வட்டாரம், கழுகரை, ஐஸ்வர்யா நகர், போத்த நாயக்கனூர், சால்ரப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பொதுமக்களை அப்பகுதிகளில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் துரத்தி கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் தற்பொழுது பாதிக்கப்பட்ட அனைவரும் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...