உடுமலை அருகே தலையார் என்ற இடத்தில் அரசு பேருந்தை வழி மறித்து மதம்பிடித்த யானை தாக்குதல்- பயணிகள் அலறல்

நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லை பகுதியான மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக படையப்பா என்ற யானை மதம் பிடித்து சுற்றி வருகின்றது .இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது.



அப்போது பேருந்தில் இருந்த மக்கள் கடும் கூச்சலிட்டனர். இருப்பினும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை யானை தாக்கியதால் சேதம் அடைந்தது. உடுமலை அருகே அரசு பேருந்தை யானை வழிமறித்து தாக்குதல் நடத்திய காரணத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் நடுவழியில் கடும் அவதி அடைந்தனர்.



இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில் மதம்பிடித்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...