கோவை கொடிசியாவில் கல்லூரி கனவு 2024 திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

கோவையில் 178 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5.12 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (பிப்.29) வழங்கினார்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (பிப்.29) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற வழிகாட்டலை வழங்க ‘கல்லூரிக் கனவு 2024’ திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



உயர் கல்விக்கு வழிகாட்டுகின்ற கையேட்டை வெளியிட்டு அதனை மாணவர்களிடம் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பல முன்னணிநிறுவனங்களில் உயர் பொறுப்பில் உள்ள தமிழர்களின் வழிகாட்டுதலை நம் இளைஞர்களுக்கு வழங்கிடும் வகையில் naanmudhalvanmentors.com எனும் இணையதள சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்கிற ஆயுதம்’ என்கிற வகையில், இந்திய ஒன்றியத்திலேயே கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வறுமையோ, பொருளாதார சூழலோ நம் மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, நம்முடைய சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மூலம் கல்விக்கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தாண்டில், சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.1016 கோடி அளவுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1956 கோடி அளவுக்கு கல்விக்கடன் உதவிகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.



இந்த நிலையில், கோவையில் 178 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5.12 கோடி மதிப்பிலானகல்விக் கடனுதவிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (பிப்.29) வழங்கினார்.



கல்விக்கடன் பெறும் மாணவர்கள் ஈடுபாட்டோடு படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தினார்.



கோவை மாவட்டத்தில் உள்ள, 4 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த 622 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணைகள் - ஏ.டி.எம் கார்டுகளை இன்று (பிப்.29) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.



மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கின்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தையும் இன்று கோவையில் தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...