கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகத்தினை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 6 மையங்கள், தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாக மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட்) கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில் இன்று (29.02.2024) திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் சாய்பாபா காலனி, ரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 120 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 6 மையங்கள், தனியார் பங்களிப்புடன் (எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட்) கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாக மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின் போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாகி ரவி கட்டாரியா, நிர்வாக தலைவர் அமுல்கேத்திரா, ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவைகள் மாவட்ட திட்ட அலுவலர் முருகேஸ்வரி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் கவிதா பப்பி, ஆண்டாள், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...