தொண்டாமுத்தூரில் விளைநிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் - விவசாயிகள் புகார்

தீத்திபாளையத்தில் மயில்சாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள், சின்ன வெங்காய பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: தொண்டாமுத்தூரில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல வகையில் கையாண்டும் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. கோவை தீத்திபாளையம் மயில்சாமி கவுண்டர் என்பவர் தோட்டத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சின்ன வெங்காய நடவு காட்டில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



60 நாட்கள் ஆன சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கத்தின் நிர்வாகிகள், தொண்டாமுத்தூர் விவசாயிகள் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...