கோவை ரயில் நிலையம் லங்கா கார் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தி

கழிவுநீர் வெளியேறி பிரச்சனை ஏற்படும்போதும் தூய்மை பணியாளர்களை வைத்து தற்கால தீர்வு காண்பதில் மட்டுமே கோவை மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் சந்திப்பு லங்கா கார்னர் அருகில் சாலையில் கழிவுநீர் குழாய் அடைபட்டதால் சாலைகளில் பெருக்கெடுத்து கழிவுநீர் ஓடுகிறது. இதனால் ரயில் நிலையம் வரும் பயணிகளும், சாலையின் பயணிக்கும் வாகன ஓட்டுகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

குறிப்பாக இந்த சாலையில் அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் அரசின் வரிப்பணம் வீணாகி தொடர்ந்து இது போன்ற அவலம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்போதும் தூய்மை பணியாளர்களை வைத்து தற்கால தீர்வு காண்பதில் மட்டுமே கோவை மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் தற்போது தான் இந்த சாலையில் பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் தொடர்ந்து நடைபெறும் இது போன்ற அவலங்கள் நடப்பது கோவை மாநகராட்சியின் அலட்சியமும் கோவை மாநகராட்சியின் மெத்தனப் போக்குமே இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு காரணம் என்று அப்பகுதிமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.



மேலும் இந்த சாலையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதி என்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதனால் அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தொற்று நோய் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால் கோவை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...