நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய பரிசீலனை- பொள்ளாச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராபாளையம், தாத்தூர் உள்ளிட்ட பகுதியில் நோய் தாக்கிய தென்னை மரங்களை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: பொள்ளாச்சியில் தென்னை மரங்களில் பரவியுள்ள கேரளா வாடல் நோயால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரடியாக வந்து கள ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராபாளையம், தாத்தூர் உள்ளிட்ட பகுதியில் நோய் தாக்கிய தென்னை மரங்களை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இதுகுறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டிருந்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.,கேரளா வாடல் நோயால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும், பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் நோய் பரவலை கட்டுப்படுத்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாகவும், கேரளா வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்றும், நோயால் பாதிக்கபட்ட தென்னை மரங்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதால், தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பேசி இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய பரிசீலனையில் உள்ளது என்றும், உணவில் தேங்காய் எண்ணெய் உபயோகம் என்பது குறைவாக இருப்பதால் இதற்கான ஆய்வும் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தோட்டக்கலை துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...