வால்பாறை நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

நகராட்சியில் மாதாந்திர செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும், நகராட்சியில் நிரந்திர ஆணையாளர் வேண்டும் என்று கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நகர மன்ற கூட்டம் தலைவர் அழகு சுந்தரம் வள்ளி மற்றும் துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.



கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.



நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர மன்ற கூட்டம் துவங்கிய நிலையில் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் மகுடிஷ்வரன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை ஈடுபட்டார்.



நகராட்சியில் மாதாந்திர செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும், நகராட்சியில் நிரந்திர ஆணையாளர் வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து மற்ற கவுன்சிலர்களும் இதே கோரிக்கையே வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.



வால்பாறையில் வளர்ச்சிப் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. நகராட்சி ஆணையாளர்கள் கூடுதல் பொறுப்பேற்று பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியிலிருந்து வந்து செல்கின்றனர். வாரம் இருமுறை வந்து சொல்லுவதால் பணிகள் செய்ய முடியாமல் உள்ளன என்று நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் நகர மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் சமாதானம் பேச்சுவார்த்தை செய்து சமரசம் செய்தனர். இதை தொடர்ந்து,தமிழக அரசு வால்பாறைக்கும் நிரந்தர ஆணையாளர் நியமிக்க வேண்டும், எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மூன்றாவது வார்டு உறுப்பினர் வீரமணி 12 வார்டு உறுப்பினர் அன்பரசன் ஆகியவர்கள் கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகராட்சி வளாகம் பரபரப்படைந்தது. அதிகப்படியான சத்தம் வந்ததால் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் நகர மன்ற கூட்டத்தை பாதையிலே நிறுத்தி மீண்டும் அடுத்து அறிவிக்கப்படும் என்று நகராட்சி தலைவர் வெளியேறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...