வால்பாறையில் அருகே வாழை தோட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டவிரோதமாக விற்கப்படும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுகிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் காவல்துறையினர் முன்னிலையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுபோன்று கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...