கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டில் திருட்டு

செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் அருகே மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை பீளமேடு போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பாபு ஜனார்த்தனன்(71). இவர் நேற்று முன்தினம் (பிப்.25) வீட்டை பூட்டிவிட்டு கடைவீதிக்கு சென்றார். அப்போது அவர் சாவியை வீட்டுக்கு வெளியே செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் அருகே மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு அலமாரியில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கு வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் காணவில்லை. சாவியை தேடி எடுத்து மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

இது குறித்து பாபு ஜனார்த்தனன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...