வருங்கால இந்தியா வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும் - கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில், கலந்து கொள்ள வந்த என்னை தமாக தொண்டர்கள் திரளாக வரவேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தமாக தொண்டர்கள், தலைவர்களோடு இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் கால இந்தியா மிக உயர்ந்த, மதிப்புக்குறிய, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும்.

அந்த உயர்ந்த நிலைக்கு கடந்த 10 ஆண்டு பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக இந்த தேர்தலில் அமையும்.

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு களப்பணி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...