வீரபாண்டி பேரூராட்சியில் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி - ஒருவர் படுகாயம்

வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். மாரிமுத்து என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தினேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் தினேஷ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனிருந்த மாரிமுத்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...