வீரபாண்டி பேரூராட்சியில் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி - ஒருவர் படுகாயம்

வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். மாரிமுத்து என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தினேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் தினேஷ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனிருந்த மாரிமுத்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...